திருச்சிற்றம்பலம்
திருவாசகம் பொருள் உணர்ந்து பாடினால் அறிவுவரும் , அருள் உணர்ந்து பாடினால் அழுகை வரும் ஒரு இறைவன் திருப்பாடல். இந்தத் திருவாசகத்தின் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் அடியவர்கள் பாடுவதற்கான ஆர்வத்தினை உண்டாக்கும் பொருட்டு யாழ்ப்பாணம் தென்னாடு செந்தமிழாகம சிவமடம், திருவாசக முன்னுரை எனும் காணொளித் தொகுப்பினை பாண்டிநாட்டுப் புலவர் சிவத்திரு.சொ.சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின் துணையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இதனைக் கேட்பது மட்டுமல்லாது திருவாசகத்தின் பெருமைகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து, நீங்களும் பாடிப்பரவி அப்பனின் அருளை அனுபவியுங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் வல்ல தென்னாடு ஐம்பூதநாதர் என்றென்றும் துணைநிற்பார்.
திருச்சிற்றம்பலம்
திருவம்பலம் தென்னவன்
![](https://i.ytimg.com/vi/-6_wY8kTPbw/maxresdefault.jpg)