வழிகாட்டும் ஆவியே வாரும்
எம்மை வழிநடத்தி வாழ்விக்க வாரும்
வாருமையா இறைஆவியாரே
வாழ்விக்கும் எங்கள் துணையாளரே
1.அன்பினை பொழிந்து அபிஷேகம் செய்து
அருட்கொடையால் எம்மை நிரப்பனுமே
எம் வினைத் தீர்க்க ஜீவனை தந்த
இயேசுவிடம் எம்மை சேர்க்கணுமே
2.பாவங்கள் போக்கி பயமதை நீக்கி
திடபடுத்தி எம்மை நடத்தனுமே
மாய உலகத்தின் மயக்கத்திலிருந்து
தெளிவுட்டி கரை சேர்க்கணுமே
3.உள்மனகாயம் மந்திர மாயம்
யாவையும் போக்கி தாருமையா
சொல்லும் செயலும் வெல்லும் வகையால்
வரம் தந்து எம்மை உயர்த்துமையா
![](https://s2.save4k.ru/pic/1eKLx347qUA/mqdefault.jpg)