#ஸ்வர்ணாகர்ஷணபைரவர்அஷ்டகம் #Bhairavguruji #muthugurukkal #ஸ்வர்ண பைரவர் #ஸ்ரீசொர்ணபைரவர் #ஸ்ரீசொர்ணஆகர்ஷணபைரவர் #ஸ்ரீபைரவர் #காலபைரவர்
#வடுகபைரவர் #சொர்ணபைரவர்மூலமந்திரம் # tamil #தமிழ் #பைரவர்மந்திரம் #பைரவர்மூலமந்திரம் #சொர்ணபைரவர்மந்திரம் #மந்திரம்
#DhanamTharumBairavarSong #DevotionalSongTamil
#பைரவர் அஷ்டகம் பாராயணம் செய்வதின் பலன்கள் ;
3 முறை பாராயணம் செய்தால் குருபகவான் அருள் கிடைக்கும் !
6 முறை பாராயணம் செய்தால் தொழில் லாபம் கிடைக்கும் !
8 முறை பாராயணம் செய்தால் சனி தோஷம் விலககும் அருள் கிடைக்கும் !
9 முறை பாராயணம் செய்தால் நவகிரகங்கள் அனுகிரஹம் கிடைக்கும் !
11 முறை பாராயணம் செய்தால் ராகு கேது தோஷம் நீங்கும் !
15 முறை பாராயணம் செய்தால் திருமணம் கைகூடும் !
18 முறை பாராயணம் செய்தால் சத்ருக்கள் விலகும் !
21 முறை பாராயணம் செய்தால் சர்வ திருஷ்டி விலகும் !
24 முறை பாராயணம் செய்தால் நினைத்தது நடக்கும்- கேட்ட வரம் கிடைக்கும் !
54 முறை பாராயணம் செய்தால் குபேர சம்பத்து கிடைக்கும் !
64 முறை பாராயணம் செய்தால் குழந்தை பக்கியம் விரைவில் கிடைக்கும் !
108 முறை பாராயணம் செய்தால் சர்வ கார்யம் ஜெயம் அனைத்திலும் வெற்றி !
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகத்தை இதைத் தினமும் படித்து வந்தால் தீராத கடன்கள் தீரும்.
ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தருவது.
வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும், சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தன விருத்தியையும் அடைவார்கள்.
#ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம் பாடல்வரிகள் = LYRICS :
#தனந்தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினந்தவிர்த் தன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனாம்
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#முழுநில வதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன்விதைப்பான் உடைமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப்பொழிவான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நான் என்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடபொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
#ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய ஷேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமேஎன்பான் தனமழை பெய்திடுவான்
![](https://i.ytimg.com/vi/2_eE3XjCuDs/mqdefault.jpg)