Pradosha Velai | Album : Panchalingam | Lord Shiva Song | Singer : S P Balasubramaniam | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Amutham Music
பிரதோஷ வேளை | இசைத்தொகுப்பு : பஞ்சலிங்கம் | சிவன் பாடல் | குரலிசை : S P பாலசுப்ரமணியம் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
பாடல்வரிகள் :
வெள்ளிப்பனிமலை வள்ளல் பெருமான்
துள்ளியெழுந்து ஆடிடும் நடனம்
காலம் தோறும் உலகில் எங்கும் கருணை சேர்த்திடுமே
ஐயன் நடனமே திவ்யதரிசனம் ஆனந்தம் தானே
அகலாத பாவம் யாவும் போகும் தானே
பிரதோஷவேளை . . .
பிரதோஷவேளை சிவ பெருமானின் லீலை
அந்தி மாலையில் நந்தி வாகனன்
ஆடல் யோகம் ஊட்டும் தவம்
அந்த வேளையில் அரனின் கோலமோ
காணக்காண சுகம் சுகம்
ஆதிலிங்க ஈசனை நாமம் சொல்லி வேண்டிட
அல்லல் போகும் தோஷம் நீங்கும் யாவும் அற்புதமே
கைலாச நாதன் வாழ்க அவன் இரு தாள்வாழ்க
சிவனடியாரை ஆட்கொள்ளும் சிவனருள் வாழ்க
ஆலகாலமுண்ட நெஞ்சில் அமுதம் பெருகுமே
அண்டம் எங்கும் இன்பமாக நர்த்தனம் புரியுமே
நந்தியின் கொம்பின் இடையினில் ஆடும்
நாகாபரணன் அபிநயமே
மந்திரம் பெருக திருமுறை உருக சிவனின் நர்த்தனமே
அந்தியில் கண்டு தரிசனம் செய்ய பேறுதான் வேண்டுமே
நமசிவாய என நாமும் உரைக்க
நாதம் மகிழ்ந்து நன்மை அளிக்க
நாடிடும் புண்ணிய நேரமிதே
புண்ணிய நேரமிதே புண்ணிய நேரமிதே
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே
அங்கும் இங்கும் முன்னும் பின்னும் வலமாய் சுற்றியே
அன்று வானின் தேவர் கண்டார் அமுதெனும் வெற்றியே
அதை மனம் எண்ணி ஹரனைச் சுற்றிட
தோஷம் நீக்கும் சுபதினமே
அம்பிகை நாதன் அபிஷேகம் காண ஆயிரம் பலன் வருமே
ஆதிரை அழகன் அலங்காரக் கோலம் கண்களில் நிற்குமே
நமசிவாய என நாமம் உரைக்க
நயனம் திறந்து சிவனும் களிக்க
அவனருள் சேர்ந்திடும் நேரமிதே
புண்ணிய நேரமிதே புண்ணிய நேரமிதே
பிரதோசம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோச காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோச வழிபாடு எனவும், பிரதோச தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோச விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.பிரதோச விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. இது ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு பட்சங்களிலும் வருகின்ற திரயோதசித் திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள பிரதோசகாலத்திற் சிவபெருமானை குறித்து அநுட்டிக்கப்படும் விரதமாகும்.
இவ்விரதத்தை நோற்க விரும்புபவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனிப் பிரதோச நாளில் விரத அநுட்டானத்தைத் தொடங்குதல் மரபு. பிரதோச விரதம் அநுட்டிப்போர் பகல் முழுவதும் உபவாசமிருந்து பிரதோச வேளையாகிய சூரிய அசுதமனத்தின் போது சிவாலயங்களில் சிவதரிசனம் செய்த பின் போசனம் செய்தல் வேண்டும்
Music Download & Streaming
Apple Music : [ Ссылка ]
Amazon Music :[ Ссылка ]
Google Play Store :[ Ссылка ]
spotify :[ Ссылка ]
Wynk Music :[ Ссылка ]
#Spbalasubramaniyam #Amuthammusic #panchalingam
![](https://i.ytimg.com/vi/3lEm5YlBMes/maxresdefault.jpg)