நடராஜப் பத்து
சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள் படுவது சிதம்பரம் ஆகும். சித்+அம்பரம் = ஞானாகாசமாக அமைந்த ஸ்தலம். உலக புருஷனின் ஹ்ருதய ஸ்தானத்திலும், சுழுமுனை நாடியிலும் அமைந்த இடம். உபநிஷதங்கள் உரைக்கும் (புண்டரீகபுரம், தஹராகாசம்) ஸ்தலம். தரிசிக்க முக்தி தரும் கோயில். தில்லைச் செடிகளால் சூழப்பட்டது.
சிவபெருமான் அருவுருவமாக மூலஸ்தானத்தில் அமைந்த இடம். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சேவித்த ஸ்தலம். வேண்டுவதை உடன் அருளும் ஸ்தலம். மரண பயம் போக்கும் ஸ்தலம்.
சிதம்பரத்தின் மூர்த்தியாக விளங்குபவர் ஸ்ரீ நடராஜ ராஜர். அனைத்து தெய்வங்களும் தொழுதேற்றக் கூடியவர். ஆயுதங்கள் ஏதும் ஏந்தாமல் வாழ்விற்கு மிக அவசியமாகிய ஒலிக் கருவியையும் (டமருகம்), ஒளிக் கருவியையும் (தீச் சுடர்) கரங்களில் ஏந்தியவர். பஞ்சக்ருத்ய (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) பரமானந்த நடனம் ஆடுபவர். கோடி சூர்ய பிரகாசராக விளங்குபவர்.
வேதங்கள் போற்றும் வேதநாயகர். கலைகள் போற்றும் கலாதரர். சித்தாந்தம் சித்தரிக்கும் சித்சபேசர். தமிழ் மறைகள் வணங்கும் தன்னிகரற்றவர். பரதம் போற்றும் பரமேஸ்வரர். இசைக்கலை இயம்பும் ஈஸ்வரர். காப்பியங்கள் போற்றும் கனகசபேசர். ஞானம் அருளும் ஞானமூர்த்தி. மக்கள் வணங்கும் மகேசர். வரங்கள் அருளும் வள்ளல்.
ஸ்ரீ நடராஜரை பழங்கால இலக்கியங்களில் சிறப்புற்றதாக விளங்கும் சிலப்பதிகாரம்(நடராஜர் ஆடிய கொடுகொட்டிக் கூத்து: (28: 67 - 75) - "திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறையாற்பவும் .... இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்") முதற்கொண்டு பல்வேறு இலக்கியங்கள், பாசுரங்கள், பதிகங்கள் அனைத்தும் போற்றி பறைசாற்றுகின்றன.
பிற்காலத்தில் எழுதப்பட்ட பாடல்களிலும் ஸ்ரீ நடராஜரின் தாண்டவங்களை விவரித்துச் சொன்ன பாசுரங்கள் (கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்கள் போன்றவை) மக்களிடம் மிக எளிதில் சென்றடைந்தன.
நாம் இங்கு காணவிருப்பது பிற்காலத்தில் எழுதப்பட்ட, நடராஜ பத்து - சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சிறுமணவூர் முனுசாமி என்பவர் எழுதிய நடராஜ பத்து சைவ அன்பர்களிடம் மிக பிரபலாமக விளங்கியது.
மிக எளிதாக விளங்கக் கூடிய வார்த்தைகள், செறிவு நிறைந்த கருத்துக்கள், அழகிய சந்தங்கள் என்பதாக அமைந்த விருத்தங்கள் வகையைச் சேர்ந்தது நடராஜ பத்து பாடல்கள்.
ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே" என்று முடியும் வரிகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்வதாக அமையக்கூடியது.
ஒவ்வொரு பாடலையும் மனமொன்றிப் படித்தால் அதன் பொருள் எளிதில் விளங்கும். இதனை பாராயணம் செய்பவர்களுக்கு மிக நிச்சயம் ஸ்ரீ நடராஜரின் அருள் உண்டு.
பாடலாசிரியர் - சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இவரின் பரம்பரையினர் ஜோதிடம், மாந்த்ரீகம், சித்த வைத்தியம் போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்கியுள்ளனர். தில்லையில் விளங்கும் ஸ்ரீ நடராஜரின் மேல் அளவிற்கடந்த பக்தியினால் "நடராஜ பத்து" பாடல்களை சிறுமணவூர் முனுசாமி எழுதியுள்ளார். இவர் நடராஜ பத்து எனும் பதிகம் தவிர மேலும் ஐந்து விருத்தங்கள் எழுதியுள்ளார்.
சிறுமணவை முனுசாமி அவர்களின் வழிவந்தவர் சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஸ்ரீ நல்லப்பன் நீலகண்ட சிவா. அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டே, நடராஜர் பத்து ஆசிரியரைப் பற்றி விபரங்கள் தெரிந்துகொண்டோம். அவர் மிக ஆர்வமாக பல்வேறு தகவல்களைக் கூறினார்.
பாடல் : 1
மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்கு உரைப்பேன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.
(அனைத்துமாகி நின்ற நடராஜரைப் போற்றுவதாக அமைந்தது.)
Nadaraja Pathu- நடராஜ பத்து
Теги
Nadaraja Pathuநடராஜப் பத்துசிறுமணவூர் முனுசாமி நடராஜப் பத்துLoad Sivan songஈசனே சிவகாமி நேசனேஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனேநடராஜர் பாடல்மனம் அமைதி தரும் பாடல்மனம் மகிழ்ந்து பாடுகள்Nataraja Pathu downloadNataraja pathu full songNatarajar Patthu | நடராஜர் பத்து | Tamil Devotional SongsTamil Devotional SongsChidambaram natarajar pathuChidambaram natarajar pathu lord siva songs in tamil songlord siva songs in tamil song