உலகம் முழுவதும் உள்ள இந்து மக்கள் பெரும்பாலோனர் இல்லங்களிலும், திருக்கோயில்களிலும் தினமும் ஒலிக்கும் திருமுருகனின் தெய்வீகத் தமிழ்ப்பாடல், கந்த ஷஸ்டி கவசம்.
'கந்த சஷ்டி கவசத்தை ' இயற்றியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள்.
தேவராய சுவாமிக்களுக்கு, கட்டும் வயிற்று வலி ஏற்பட்டு, மிகவும் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்று வலி தீர்ந்த பாடில்லை. வாழ்க்கையே வெறுத்து, உயிரை மாய்த்து கொள்வது என்ற முடிவோடு, திருச்செந்தூர் சென்றார்.
அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
கவிஞரும் , மந்திர நூல் வல்லுநருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்து பாட தொடங்கினார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது.
இப்படிப் பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன. அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, ‘சஷ்டியை நோக்கச் சரஹணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்’ என்று தொடங்கும் கவசம்.
இதுபோன்று ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டுப் பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத் தரும். இதை தினமும், தியானித்து, ஓதி, திருநீறு பூசி கொள்பவர்கள், இன்பமுடன் வாழ்வர் என்று உறுதியாக கூறுகிறார் தேவராயர்.
Ещё видео!