#Swarnalatha #Kaalamellam_Kaaththirunthen_Yesuve #காலமெல்லாம்_காத்திருந்தேன் #Devotional_Song
#Christian_Song_Tamil #சுவர்ணலதா
காலமெல்லாம் காத்திருந்தேன் இயேசுவே
கண் விழித்து பார்த்திருந்தேன் பேசவே
விரைந்து என்னில் வந்திடுவாய்
மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன்
மகிழ்ந்து உன்னை ஏற்றிடுவேன்
உயிராக நீ வந்தால் உடலாகி இணைந்திடுவேன்
உறவாக நீ கலந்தால் உள்ளத்தைத் தந்திடுவேன்
மழையாக நீ பொழிந்தால் மண்ணாகி குளிர்ந்திடுவேன்
மலராக நீ மலர்ந்தால் மணமாக மாறிடுவேன்
மணமாக மாறிடுவேன்
கதிராக நீ வந்தால் பொழுதாக புலர்ந்திடுவேன்
கலையாக நீ வளர்ந்தால் இமையாமல் ரசித்துடுவேன்
விழியாக நீ பிறந்தால் ஒளியோடு வாழ்ந்திடுவேன்
அன்பாக நீ கரைந்தால் உன் அடிமையாகிடுவேன்
உன் அடிமையாகிடுவேன்
Ещё видео!