ஸ்ரீ சக்தி சரவண சுவாமிகளிடம், ஸ்ரீ செங்காளம்மன் நடத்திய முதல் அதிசயம்,
ஸ்ரீ சக்தி சரவண சுவாமிகள் தந்தை பெயர் துரைசாமிமுதலியார்,
தாய் டி.சரோஜினி அம்மாள் ஆவார்கள்...
ஸ்ரீ சக்தி சரவண சுவாமிகள் சிறு வயதில் நடைபெற்ற அனுபவம் தற்போது இருக்கும் ஏரிக்கரையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் கொடிய விஷப்பாட்டிலை எடுத்துக் கொண்டு ஏரிக்கரைக்கு சென்று உள்ளார்.
விஷத்தை குடிக்கும் போது பளார், பளார் என்று இவர் கன்னத்தில் அரை விழுந்து உள்ளது. (அடி) விஷ பாட்டில் கை நழுவி கீழே விழ இவர் திகைத்து நம்மை அடித்தவர்கள் யார் என்று சுற்றிலும் பார்க்க...
அசிரி வாக்கு கேட்கிறது. மகனே, 'உன் இடத்தில் நான் இருந்து ஆட்சி செய்து எத்தனையோ மக்களுக்கு விணை தீர்க்க வேண்டும். இன்றையில் இருந்து
"நீ தான் நான். நான் தான் நீ" என்று கூறி மறைந்தால் ஸ்ரீ செங்காளம்மன். இன்று உள்ள ஏரிக்கரை தாமரைக் குளக்கரையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வு நடைபெற்று 32 வருடங்கள் ஆகிறது.
இன்று வரை அன்னை ஸ்ரீ செங்காளம்மனின் பரிபூரண ஆசியுடன் வரும் பக்தர்களின் வினைதீர்த்து சுபிச்சம் அளித்து வருகிறார் ஸ்ரீ சக்தி சரவண சுவாமிகள்...
அருள்மிகு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயம்..
அகத்தியர் வலம் வந்து நீராடி தியானம் செய்த ஏரிக்கரையின் எதிரில் அமைய பெற்ற
அருள்மிகு அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி ஸ்ரீ செங்காளம்மன் ஆலயம்..
11, திருவள்ளூர் நெடுஞ்சாலை, அலமாதி, சென்னை - 52.
ஸ்ரீ செங்காளம்மன் அறக்கட்டளை பதிவு எண்:072;/101.
ஸ்தாபகர்: சக்தி சரவண ஸ்வாமிகள் - சக்தி சசிகலா சரவணன்
முதலும் முடிவும் இல்லா,
அருட்பெருஞ்சோதியாய் அகிலாண்டகோடி இம்மாண்ட நாயகியாய் செங்குன்றம் அடுத்த ஸ்ரீ அகத்திய மாமுனிவர் வலம் வந்த அலமாதி கிராமத்தில். அன்னவர் வழிப்பற்றிய பூரண ஆசி பெற்ற ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீ பாலதண்டாயுத மௌன குரு ஸ்வாமிகள் அவர்களின் பூரண ஆசியோடு அலமாதி, நெடுஞ்சாலையில், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், பொம்மியம்மாள், வள்ளியம்மாள், ஸ்ரீ மதுர வீரசாமி, ஸ்ரீ அபாய ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்கள் கூடிய புவனம் பதிநான்கையும், பூத்த வண்ணம் காத்தவளாய் மகிழ்ந்திருக்கும் ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தைப் பற்றி விரிவான வரலாறு தவத்திரு விபூதிரித்தர் அவர்களின் நல்லாசியுடன் அறிவோமா? பக்தர்களே!
சித்தூர் ஜில்லா சூலூர்பேட்டை ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செங்காள பரமேஸ்வரி ஆலயம் திரு. சக்தி சரவண சுவாமிகளின் குலதெய்வம்.
திரு சக்தி சரவண சுவாமிகள் தன்னுடைய 11 வயதில் அலமாதியில் இருந்து குலூர்பேட்டை ஸ்ரீ செங்காளபரமேஸ்வரி ஆலயத்திற்கு
சென்று வருவார் தன்னுடைய 21 வயதில் இருந்து பாதயாத்திரையாக தனி ஒருவராகவே சென்று வந்துள்ளார். பிறகு வருடம் வருடம் செல்லும் தருவாயில் இவருடன் வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை அப்போதே பெருகியது.
இன்று ஐம்பது வயதை கடந்து விட்டார் இருப்பினும் பாத யாத்திரை தொடர்கிறது. பக்தர்கள் திரளாக வருடம்தோறும் இவருடன் சென்று வருகிறார்கள்.
இவர் சூலூர்பேட்டையில் உள்ள ஸ்ரீசெங்காள பரமேஸ்வரி ஆலயம் போலவே இங்கே அலமாதியில் ஏரிக்கரையின் எதிரில் ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தை அமைத்து
3.7.2011ல் கும்பாபிஷேகமும் செய்தார்.
அன்று முதல் இன்று வரை பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.
ஸ்ரீ செங்காளம்மனுக்கு பல்லாக்கு சேவை, அன்னதானம், இரவு 9.30 மணிக்கு வேள்வி ஆரம்பம். இரவு 12.30 மணிக்கு தீபாரதனை நடைபெற்று நெய்வைத்தியம் செய்து பிரசாதம் வழங்குதல் என வருடம் வருடம் ஜூலை மாதம் நடைபெறும்.
வாரவாரம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இருந்து அருள்வாக்கு நடைபெறும்.
ஆலயத்தில், அருள்வாக்கு கூறுபவர் திருமதி சக்தி சசிகலா சரவணன் அவர்கள் வழங்குவார்கள்.
இங்கே என்ன விசேஷம் என்று கேட்பவர்களுக்கு எப்பேர்ப்பட்ட பேய், பிசாசு, ஏவல், வியாதிகள் என எதுவானாலும் இங்கே ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தை வலம் வந்து அருள்வாக்கில் அமர்ந்து அவர்கள தரும் பிரசாதம் பெற்றால் உடன் பிரச்னைகள் அகல பெற்று சுபிச்சம் காண்கிறார்கள் மக்கள், இது கண்ணன கண்ட உண்மை.
ஸ்ரீ செங்காளம்மன் ஆலயத்தின் வருட பூஜையின் விபரம்:
தைப்பூச தெப்பத்திருவிழா வருடா வருடம் தைப்பூசம் அன்று வெகு விமர்ச்சியாக இக்ே கொண்டாடப்படுகிறது.
1. ஜூலை மாதம் 2022 - ஆண்டு அபிஷேகம். குங்குமம் அர்ச்சனை, பால்குடம், தீமிதிவிழா நடைபெறும்,
2. ஆடிமாதம் 2022 - கூழ் வார்த்தல் விழா நடைபெறும்.
3. ஆவணி மாதம் 2022 - பாத யாத்திரை நடைபெறும்.
4. பூரட்டாதி மாதம் 2022 - திருவேங்கமலையான் திருப்பதி அலங்காரம் நடைபெறும்.
5. கார்த்திகை மாதம் 2022 ஸ்ரீ ஐயப்பனுக்கு மலர் பூஜை நடைபெறும்.
6. மார்கழி மாதம் 2022 - விசேஷ நித்திய பூஜை மற்றும் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி நடைபெறும்.
7. தை மாதம் 2023 - உற்சவ திருவிழா, திருவிளக்கு பூஜை நடைப்பெறும். தைப்பூச திருவிழா நடைபெறும்.
8. சித்திரை மாதம் 2023 - காய்கனி அலங்காரம் (தமிழ் புத்தாண்டை முன்னிட்டு) அக்கினி நட்சத்திர நிறைவு பூஜை நடைபெறும், மதுரை வீரனுக்கு மகா அபிஷேகம், அன்னதானம் நடைபெறும்..
விவரம்:-
நன்கொடை வழங்குபவர்கள் ஆலயத்தை தொடர்பு கொள்ளலாம்..
ஸ்ரீ செங்காளம்மன் அறக்கட்டளை(பதிவு எண்: 3072/2011)
நெ.111, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, அலமாதி, சென்னை-52.
சக்தி சரவணன் சுவாமிகள்,
Phone : 97908 27733, 80720 90229
ஸ்ரீ செங்காளம்மனுக்கு அலங்காரம் செய்பவர்கள்: திரு. ஹரிஷ், தினேஷ்
பஸ்ரூட்: ரெட்ஹில்ஸ் இறங்கி அங்கிருந்து அலமாதி வரவேண்டும். 505,57D,57M,65B,114 505A BHARATHI, SUNDRAM
பஸ் ஸ்டாப் ¬:- அலமாதி ஏரிக்கரை இறங்கவும்.
இணைய விவரங்கள் - INTERNET DETAILS
TEMPLE WEBSITE BLOG : [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/9iH5LZVxH3g/maxresdefault.jpg)