[Disclaimer: This video clip is posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I do not wish to violate any copyright owned by the owner of the song / Movie. I do not own any copyright for the song. If posting of the song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from You tube. If you like the song, then please buy the original Movie/Song CD from the copyright owner of the movie.]
நீண்ட நாட்களாகி விட்டன இந்த அற்புதமான மெல்லிசையை ரசித்து! ரசித்தவர்கள் மீண்டும் ரசிப்பதற்காக!
வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்திலிருந்து பத்மினி பங்கு பெற்ற ஓர் அரிய , இனிய பாடல்!
"வெண்ணிலவே தண்மதியே என்னுடனே வா வா,
நிலவே நிலாவே வா வா."
கதைத் தலைவி (பத்மினி ) யைத் தலைவன் (ஜெமினி கணேசன்) ஆபத்திலிருந்து காக்கின்றான். அவன் யாரென்றே தலைவிக்குத் தெரியாது. இருந்தும் வீரம், விவேகத்துடன் தன்னைக் காத்த தலைவனிடம் ஈர்க்கப் படுகிறாள் அவள். இதயத்தில் காதல் சுரந்து ததும்பி வழிகிறது.
தன்னைக் காக்கும் முயற்சியில் காயம் பட்ட அவனைக் கரை சேர்த்துக் காக்கும் கடமை அவளுக்கு. துணைக்கு உடன் வர நிலவைத் தவிர யாருமில்லை. அந்த அமைதியான இரவில் தன் நிலை குறித்துக் கூறி, தலைவன் மீது எழுந்த காதலை வெளிப் படுத்தும் அற்புதமான Situation பாடல். தலைவன் தூங்க அவள் பாடும் தாலாட்டாகவும் ஆகிறது அப்பாடல்!
கொத்தமங்கலம் சுப்புவின் காட்சிக் கேற்ற அருமையான வரிகள்! இனந் தெரியாத தலைவன் தன்னைக் காத்த விதம் கூறும் தலைவி இறுதியில் அவனை இதயத்திலுறை இறைவனாகவே ஆக்கி விடுகிறாள்!
‘’எந்த ஊரு என்ன பேரு எங்கிருந்தோ வந்தான்
இதயம் கோயில் கொண்டானே...!”
இசை : சி. ராமச்சந்திரா
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு
குரல்: பி.லீலா
![](https://i.ytimg.com/vi/Cv_HuYVnSzE/maxresdefault.jpg)