Brahmahathi Dosham Pariharam / Brahmahathi Dosha Remedies in Tamil covers how to find out brahmahathi dosham in horoscope and brahmahathi dosham nivarthi.
சிலருக்கு எதிலும் காரியத்தடங்கல் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம், கல்வி, குழந்தைகள், அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும். நல்லஅறிவு, நல்ல பழக்கங்கள், நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம்.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? பிரம்மஹத்தி தோஷம் எதனால் ஏற்படுகிறது? பிரம்மஹத்தி தோஷதிற்கு உரிய பரிகாரங்கள் என்ன? என்பதை பத்தி தான் இன்னைக்கு நாம பாக்கபோறோம்.
பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?
பிரம்மன் தோற்றுவித்த உயிர்களானது தனது பாவ புண்ணிய கணக்குகளுக்கு தக்கவாறு மரணம் சம்பவிக்கின்றது. அவ்வாறன்றி ஏதோ ஒருவித காரணத்திற்காக நம் முன்னோர்களோ, நாமோ உயிர்களைக் கொல்லும் பொழுதும், கொடுமையான பாவங்களைச் செய்வதாலும், தாய்க்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பது, பசுவைக் கொல்வது, குருவை உதாசீனப்படுத்துவது, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது, தெய்வச் சொத்தைத் திருடுவது போன்றவற்றாலும், இந்த பிரம்மஹத்தி தோஷமானது நம்மைப் பற்றிக்கொள்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. இத்தோஷமானது பெரும் பாவமாகவும், தலைமுறைகளைக் கடந்தும் இப்பாவம் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
பிரம்மஹத்தி தோஷம் ஒருவருக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை எப்படி அறிந்து கொள்வதெனப் பார்ப்போம்:
பிரம்மஹத்தி தோசம் பல்வேறு முறைகளில் கணிக்கப்படுகிறது. ஒருவர் தனது முழு ஜாதகத்தை வைத்து ஜோதிடரிடம் ஆலோசித்தால் தான் இந்த தோஷம் உள்ளதா இல்லையா என்று அறியமுடியும். ஜாதகத்தை வைத்து ஜோதிடரை ஆலோசித்து அவர் வழிகாட்டுதலின் பேரில் தக்க சமயத்தில் பிரம்மஹத்தி தோஷ பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு சில வழிமுறைகளை இப்போது சொல்கிறோம், மற்றவை ஒரு ஜோதிடரால் மட்டுமே கணிக்க இயலும்.
1. ஒருவர் ஜாதகத்தில் சனிபகவான் குருவுடன் இணைந்தாலோ, குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பது அர்த்தம்.
2. லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
3. ராகு இருக்கும் ராசியில் இருந்து 5 அல்லது 9 - ம் வீட்டில் சனி, குரு சேர்க்கை ஏற்பட்டிருந்தாலும் (அதாவது சனியும் குருவும் ஒரே பாதத்தில் 10 டிகிரியில் இருக்கவேண்டும்) தோஷமாகும்.
பிரம்மஹத்தி தோஷதினால் ஏற்படும் விளைவுகள்:
இந்த தோஷம் இருந்தால், ஜாதகர் தனது பிறவியில் என்ன உழைத்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்காமல், வறுமையும் தோல்விகளையுமே சந்தித்து வாழ்வார். வேலை கிடைக்காது, வேலை கிடைத்தாலும் உரிய கூலி கிடைக்காது. கூலி கிடைத்தாலும் முறையான அங்கீகாரம் கிடைக்காது. இந்த நிலை ஓர் ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல, பல ஆண்டுகள் நீடிக்கும். தொழிலில் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிய வண்ணம் இருப்பார்கள். ஏன் சிலவேளைகளில் அவர்களது குடும்பத்திலே கூட அவர்களுக்கு மரியாதை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது. வாழ்க்கை பெரும்பாலும் கடனிலேயே கழியும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீராத நோய்கள் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்வுகள் ஏற்பட கால தாமதமாகும். சரியான தொழில் மற்றும் வேலைவாய்ப்பின்மை, புத்திர பேறில்லாமை, சரியான கல்வி கற்க முடியாத சூழ்நிலை, கணவன் மனைவி பிரிந்து வாழ்வது மற்றும் விவாகரத்து போன்ற கெடுதலான நிகழ்வுகள் ஏற்படும்.
#aalayamselveer #brahmahathidosham
Ещё видео!