Movie :Sippikkul Muthu
Music:Ilaiyaraaja
Lyrics:Vairamuthu
Singer: SP Balasubrahmanyam SP Shailaja
Starring : Kamalhasan Radhika
Produced By:Nageswararao
Directed By:K Viswanath
Released In:13TH March 1986
Lyrics:
ராமன் கதை கேளுங்கள்..
ராமன் கதை கேளுங்கள்..
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்...
ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
சீதையின் சுயம்வரம்
நிச்சயிக்கப்பட்ட நாளிலே
ஜனகனின் மண்டபத்தில்
மாலை ஏந்தி வந்த ஜானகியை
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று
மன்னவரெல்லாம் பார்க்க
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தி கண்ணெடுத்து
பார்க்க மாட்டாரோ
என்று கவலை கொண்டார்களாம்
சீதா தேவியின் செல்லத் தோழிகள்
ராமன் கதை கேளுங்கள்..
ராமன் கதை கேளுங்கள்..
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்.....
ராமன் கதை கேளுங்கள்..
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
அலங்காரச் சீதை அழகரசாளும் கோதை
விழி கண்டு குடி கொண்டு அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
புலிகளின் பலம் கொண்ட
புருஷர்கள் வந்திருந்தார் சா நி தமபமகரிச
யானையின் பலம் கொண்ட
வேந்தர்கள்
அங்கிருந்தார்....சகரிகமநிதமநிநி
புலிகளின் பலம் கொண்ட
புருஷர்கள் வந்திருந்தார்
தா தகிட தகஜுனுத
யானையின் பலம் கொண்ட
வேந்தர்கள் அங்கிருந்தார்
தகஜுனு தகதிமி தக
தோளிருமலையை தூக்கிய
வீரர் வந்தார் நிதமபம கரிக..
இடிகளை கையில் பிடிப்பவர்
பலர் இருந்தார்..
ஆகா நடந்தாள் சீதை நடந்தாள்....
விழி மலர்ந்தாள் சபை அளந்தாள்.....
வரவு கண்டு அவள் அழகு கண்டு சிவதனுசின்
நாணும் வீணை போல அதிர்ந்தது
ராமன் கதை கேளுங்கள் கதை கேளுங்கள்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல் அது உடைபட விழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர்
தம் பல் அது உடைபட விழுந்தார்
பல் அது உடைபட விழுந்தார்
தொடைதட்டி எழுந்தவர்கள்
முட்டி தெறித்துவிட
சட்டென்று பூமியில் விழுந்தார்
அவர்..சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இருகையும் நோக.....
தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பை பிடித்தபடி சுளுக்கு
எடுத்த படி ஆசனம் தேடி அமர்ந்தார்....
ஆஹா வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா...
ஆஹா வீரம்
இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாரும்
இல்லையா...
ஆஹா
வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாரும்
இல்லையா...
ஆஹா வீரம் இல்லையா....
வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா...
க்ருத தையதகுதா திமி தா
ராமாய ராமபத்ராய
ராமசந்த்ராய நமஹ
தசரதராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
தசரதராமன் தான் தாவி வந்தான்
ஆமா..
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறுநொடியில் வில்லெடுத்து
அம்பு தொடுத்தான்
மறுநொடியில் வில்லெடுத்து
அம்பு தொடுத்தான்
பட பட பட பட பட பட பட பட ஒலியுடன்
முறிந்தது சிவதனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு
ஜெய ஜெய ராமா சீதையின் ராமா
ஜெய ஜெய ராமா..சீதையின் ராமா
தசரத ராமா ஜனகன் உன் மாமா...
தசரத ராமா ஜனகன் உன் மாமா
ஜெய ஜெய ராமா சீதையின் ராமா
தசர ராமா ஜனகன் உன் மாமா...
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
காணக்காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
காணக்காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராம கல்யாண வைபோகமே
ஸ்ரீராமனே அதோ பாரப்பா
அலங்கார சீதை அழகரசாளும் கோதை அவள்
விழி கண்டு குடி கொண்டு மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீ ரகு ராமன் கதை கேளுங்கள்....
ராமன் கதை கேளுங்கள்...
![](https://i.ytimg.com/vi/NT0fIMT8UVU/maxresdefault.jpg)