சனிப்பெயர்ச்சி பாதிப்புகளை நீக்கும் திருநள்ளாறு பச்சை பதிகம் இனிய நாளாக அமைய இந்த பாடலை கேளுங்கள்
#SivamAudios #SivamDevotionals #SivamRecords BhathiChannel
Subscribe us :[ Ссылка ]
Like us on Facebook:[ Ссылка ]
Follow us on Google+:[ Ссылка ]
Follow us on Blogger: [ Ссылка ]
Follow us on Twitter: [ Ссылка ]
Follow us on Tumblr: [ Ссылка ]
Follow us on Pinterest: [ Ссылка ]
Follow us on reddit:[ Ссылка ]
Follow us on linkedin:[ Ссылка ]...
Follow us on m.vk :[ Ссылка ]
Follow us on [ Ссылка ]...
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே
தோடுடைய காதுடையன் தோல்டையன் தொலையாப்
பீடுடைய போர் விடையன் பெண்ணும் ஓர்பால் உடையன்
ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே
ஆன் முறையால் ஆற்ற வெண்ணீறு ஆடி அணியிழையோர்
பான்முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன்சூடிப்
பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே
ஏறு தாங்கி ஊர்தி பேணி ஏர் கொள் இளமதியம்
ஆறு தாங்கும் சென்னிமேலோர் ஆடரவம் சூடி
நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றை
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்கள் உச்சி எம் இறைவன் என்று அடியே இறைஞ்ச
தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி விண்கொண் முழவு அதிர
அஞ்சு இடத்தோர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே
சிட்டமார்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்
சுட்டுமாட்டி சுண்ண வெண்ணீறு ஆடுவது அன்றியும் போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால் மதியம் சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே
உண்ணலாகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி
அண்ணலாகா அண்ணல் நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகா உள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே
மாசு மெய்யர் மண்டைத் தேரர் குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய் என்று எண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே
தண் புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகில் உறைவாரே
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
Ещё видео!