#ilayaraja #vaali #prabhu #revathi #tamilsongs #lovesongs #4ksongs
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ பாடல் | aagaya vennilave song | Uma Ramanan, K. J. Yesudas . Tamil Lyrics in Description .
Movie : Arangetra Velai
Music : Ilaiyaraaja
Song : Aagaya Vennilavae
Singers : Uma Ramanan, K. J. Yesudas
Lyrics : Vaali
பாடகர்கள் : உமா இரமணன் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
ஆண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
ஆண் : மலர்சூடும் கூந்தலே
மழைக்கால மேகமாய் கூட
பெண் : உறவாடும் விழிகளே இரு
வெள்ளி மீன்களாய் ஆட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
ஆண் : தேவார சந்தம் கொண்டு
தினம்பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக்கொண்டு
தலைவாசல் வந்ததின்று
பெண் : தென் பாண்டி மன்னன் என்று
திருமேனி வண்ணம் கண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று
ஆண் : இளநீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்.
பெண் : கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண் : கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட
பெண் : நடு ஜாம வேளையில்
நெடு நேரம் நெஞ்சமே கூட
ஆண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
பெண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
பெண் : தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும்
ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண் : வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம்
கிளி பேச்சை கேட்கக் கூடும்
பெண் : அடியாளின் ஜீவன் மேனி
அதிகாரம் செய்வதென்ன
ஆண் : அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன
பெண் : இசை வீணை வாடுதோ
இதமான கைகளில் மீட்ட
ஆண் : ஸ்ருதியோடு சேருமோ
சுகமான ராகமே காட்ட
பெண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
பெண் : மலர்சூடும் கூந்தலே
மழைக்கால மேகமாய் கூட
ஆண் : உறவாடும் விழிகளே இரு
வெள்ளி மீன்களாய் ஆட
பெண் : ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ
ஆண் : அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளை தானோ
![](https://i.ytimg.com/vi/UERxjNtLjys/maxresdefault.jpg)