1953ஆம் ஆண்டு ஜெமினி S.S.வாசனின் தயாரிப்பிலும் கொத்தமங்கலம் சுப்புவின் இயக்கத்திலும் ஔவையாக
K.B.சுந்தராம்பாள் 'வாழ்ந்து காட்டிய ' வெளிவந்த ஔவையார் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல்:
இருந்து முகம் திருத்தி ஈரொடுபேன்வாங்கி
விருந்து வந்தது என்று விளம்ப - வருந்திமிக
ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத் தான்
(ராகம் கானடா)
இது ஔவையார் பெயரில் வழங்கும் தனிப் பாடல். பாடியவர் K. B. சுந்தராம்பாள்.
இதனைத் தொடர்ந்து 'பொறுமை என்னும் நகையணிந்து பெருமை கொள்ள வேண்டும் பெண்கள்' என்று தொடரும் பாடல்.
இது சுத்தசாவேரி ராகத்தில் அமைந்தது. படத்திற்கு பாடல்களை பாபநாசம் சிவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு எழுதியிருந்தனர். படத்திற்கு இசையமைப்பு M.D.பார்த்தசாரதி, P.S.அனந்தராமன், மாயவரம் வேணு.
![](https://i.ytimg.com/vi/cjuHViR7sPQ/mqdefault.jpg)