தீராத விளையாட்டுப் பிள்ளை -- கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை
(தீராத)
தின்னப் பழம் கொண்டு வருவான் -- பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்னையான் என்றா -- அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்
(தீராத)
அழகுள்ள மலர் கொண்டு வந்தே -- என்னை
அழ அஹச் செய்தபின் கண்ணை மூடிக் கொள்
குழலிலே சூட்டுவேன் என்பான் -- என்னைக்
குருடாக்கி மலரினை தோழிக்கு வைப்பான்
(தீராத)
பின்னலைப் பின்னின்றிழுப்பான் -- தலை
பின்னே திரும்புமுன் நேர் சென்று மறைவான்
வண்ணப் புடுச் சேலை தனிலே -- புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்
(தீராத)
புல்லாங்குழல் கொண்டு வருவான் -- அமுது
பொங்கித் ததும்பு நல கீதம் படைப்பான்
கல்லால் மயங்குவது போலே -- அதைனைக்
கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்
(தீராத)
![](https://i.ytimg.com/vi/eukHv4p6RwU/mqdefault.jpg)