#TheJourneyOfSolo - An anthology against the four element Water, Fire, Wind and Land. Here we go with the title poem of Dulquer Salmaan starring blockbuster Solo. !!
Poet : Manushyaputhiran
Narrator : Dulquer Salmaan
Subscribe us for more updates @ [ Ссылка ]
Solo - #WorldOfShekar - Title Poem
ஓம் நமச்சிவாய!!!
அன்பே!!! ஆயிரம் மழைத்துளிகள் என்னை நனைப்பது போல, நீ என்னை நனைத்துக்கொள்...
நதியின் ஆழங்களில் நான் மூச்சித் திணறுவது போல, நீ என்னை தழுவிக்கொள்..
கடலின் பேரலைகள் கரையை தீண்டுவது போல, நீ என்னை எடுத்துக்கொள்...
என்னை உன் கரங்களால் அனைத்துக் கொள்ளாதே, உன் மனதால் இருக அனைத்துக்கொள்...
அன்பின் தனிமையில் உனக்கு மரணமில்லை.
ஓம் நமச்சிவாய!!!
ஓம் நமச்சிவாய!!!
Solo - #WorldOfSiva - Title Poem
வன்மத்தின் வனங்கள் பற்றி எரிகின்றன..
குருதியின் சுவடுகளில் சாம்பல் படுகிறது...
குற்றத்தின் தண்டனைகளை தருபவர்கள் யாருமில்லை...
பாவத்தின் சுமைகளை பகிர்பவர்கள் எவருமில்லை...
வீழ்ச்சியின் தனிமையில் உனக்கு புகழிடமில்லை...
ஓம் நமோ நமச்சிவாய!!!
Solo - #WorldOfTrilok - Title Poem
ஓம் நமோ நமச்சிவாய !!!
விஸ்வேஸ்வர சங்கரா!!!
யுகாந்திரங்களின் கோபம்,
யுகாந்திரங்களின் நெருக்கம்,
யுகாந்திரங்களின் பொறுமை,
யுகாந்திரங்களின் தனிமை, வந்துவிட்டது எல்லாவற்றின் மீதும் பெரும் புயல் ஒன்று !!!
இந்த காற்றை எதிர்த்து நடப்பவர்கள் யார்?
காலத்தின் புயலில் உதிரும், ஆயிரம் ஆயிரம் மலர்களில் ஒரு மலர் அல்லவே நீ !!!
அழிவின் தனிமையில் காத்திருக்க உனக்கு நேரமில்லை....
Solo - #WorldOfRudra - Title Poem
என் அன்பே!!! இந்த நிலத்தின் மீதுதான் நம் உடல்கள் தழுவிக்கொண்டன..
இந்த நிலத்தின் மீதுதான் நம் பிரிவின் சுவடுகள் பதிகின்றன..
நான் சூரியன் விழும் திசையில் என் குதிரையை வேகமாய் செலுத்திக்கொண்டு போகிறேன்...
தூங்கா அஞ்சுகிற இரவுகளில் உன் கண்ணீருடன் நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன்....
இந்த நாளில் உன்னை கடந்து விடும் அற்புதம், எப்படியும் நிகழ்ந்துவிடும் தானே!!!
இழப்பின் தனிமையில் நிற்க உனக்கு நிழலில்லை...
© 2017 TrendMusic
For more updates:
Subscribe to us on:
[ Ссылка ]
Like Us on: [ Ссылка ]
Follow Us on: [ Ссылка ]
Follow Us on: [ Ссылка ]
![](https://i.ytimg.com/vi/lJ-UifbBvkE/maxresdefault.jpg)