தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
பசுபதீஸ்வரர் திருக்கோயில்
பசுபதி கோயில்(79/274)
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 79 வது தேவாரத்தலம் ஆகும்.
மூலவர் : பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்
உற்சவர் : சவுந்திரநாயகி
அம்மன்/தாயார் : அல்லியங்கோதை, சௌந்தரநாயகி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள்
புராண பெயர் : திருப்புள்ளமங்கை
ஊர் : பசுபதிகோயில்
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
#தல_சிறப்பு
இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பிகை பசுவாக வந்து பூசித்த தலம். திருச்சக்கரப் பள்ளியின் சப்தஸ்தானத் தலங்களுள் இதுவும் ஒன்று. கோபுரத்தின் மேல் எப்பொழுதும் கழுகுகள் உறைகின்றன.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
#தலபெருமை:
ஆலகால நஞ்சினை இறைவன் அமுதாகச் செய்த இடம் எனக் கூறப்படுகிறது. கர்ப்பக்கிரகம் அகழி அமைப்புடையது.
தல வரலாறு:
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர் தேவாரப்பதிகம் பெற்ற திருச்சக்கரப்பள்ளியை முதலாவதாகக் கொண்ட சப்த ஸ்தான தலங்களுள் இது 5வது தலம். சக்கரமங்கை, அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை (பசுபதி கோயில்), தாழமங்கை, புள்ளமங்கை ஆகிய ஏழும் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்கள் ஆகும். இவற்றுள் பசுபதீச்சரத்து இறைவனை சப்த கன்னியரேயன்றி, பாற்கடல் தந்த, கேட்டவரமருளும் காமதேனு பசு நாள்தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்கத் திருமேனி மீது பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்புச்சிற்பமாக உள்ளது. கோச்செங்கட்சோழன் என்ற மன்னன் முற்பிறவியில் சிலந்தி பூச்சியாக இருந்து சிவலிங்கத் திருமேனி மேல் வலை பின்னி சிவத்தொண்டு செய்துவந்தது. சிவலிங்கத்தின் மீது இலை தழைகளும், பறவை எச்சமிடுவதையும் தடுக்க சிலந்தி பின்னிய வலையின் நோக்கம் அறியாத யானை பக்தி மேலீட்டால் காவிரி நீரால் அபிஷேகம் செய்யும்போது சிலந்தி வலை அறுபட்டது. இதனால் வெகுண்ட சிலந்தி, யானையின் துதிக்கையில் புகுந்ததில் யானை கலவரமும் பீதியும் அடைந்து துதிக்கையை தரையில் அடித்து புரண்டதில் சிலந்தியும் யானையும் சிவபதம் அடைந்தன.
அச்சிலந்தி வேண்டிய வரத்தின்படி, மறுபிறப்பில் சோழநாட்டு மன்னனாகப் பிறந்தது. இவனே சங்ககால மன்னன் கோச்செங்கட்சோழன். பூர்வ ஜென்ம உள்ளுணர்வால் யானை ஏறமுடியாத கட்டுமலை போன்ற கோயில்களைக் கட்டினான். அவையே மாடக்கோயில்கள் எனப்படுகின்றன. இப்புராணக் கதையையும், கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில் என்பதை உறுதிப்படுத்தவும், கோபுர நிலைக்காலிலும், சுவர்களிலும் சிலந்தியின் வழிபாடு, யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.
மாடக்கோயில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ளக்காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் கூறலாம்.
பிராத்தனை
திருமண தடை விலகவும், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்யலாம்.
அமைவிடம்
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ தொலைவில் அய்யம்பேட்டை அருகில் பசுபதி கோயில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் செல்லும் நகர் பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம்.
பசுபதி கோயில் வரதராஜப் பெருமாள் கோயில் (கேட்டை நட்சத்திர தலம்) தரிசனம்
[ Ссылка ]
கோயில் Google map link
[ Ссылка ]
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
[ Ссылка ]
- தமிழ்
Ещё видео!