#thirukkural #tamil #thiruvalluvar #திருக்குறள் #திருவள்ளுவர் #அறத்துப்பால் #kural #thirukural #thirukkural #thirukkuralintamil
குறள் எண் : 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
குறள் எண் : 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
குறள் எண் : 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
குறள் எண் : 4
விளக்கம்வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
குறள் எண் : 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
குறள் எண் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
குறள் எண் : 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
குறள் எண் : 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
குறள் எண் : 9
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
குறள் எண் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
![](https://s2.save4k.ru/pic/uNN3dVoTR8Q/maxresdefault.jpg)