நடராஜப் பத்து:
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ,
மறைநான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ,
மண்டலமிரண்டேழு நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ, யொருவ நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ,
பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ,
போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ,
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்..?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!
Ещё видео!