திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தர் - நீறுவரி , அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கல்யாண தடை நீங்க....
சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனைத் தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியைத் தெரிவித்தான்.
காலையும் மாலையும் திருவேதிகுடியானை நினைந்து, தன் திருவடிகளைப் போற்றுகின்ற அடியார்களின் துன்பங்களைப் போக்குபவன் அவன் என்று கூறும் ஞானசம்பந்தர், ‘சனகாதி முனிவர்கள் நால்வருடன் ஆலமரத்தின் கீழ் அமர்ந்தானாக விளங்கும் அந்த துணைவன் கன்னியரொடு ஆடவர்களுக்கு விருப்பமான திருமணத்தை அருள்வதால், திருமணப் பேறு பெற்ற அம்மங்கையர்களால் போற்றப்படுகின்றவன் வேதி குடியானே,’ என்றும் தம் பதிகத்தில் கூறியுள்ளார். திருமணத் தடையால் வருந்துகின்ற பெண்களும் ஆண்களும் ஒருமுறை வேதிகுடிக்கு வந்து அந்த வேதபுரீஸ்வரரையும், மங்கையர்க்கரசியாரையும் வழிபட்டுச் செல்வார்களேயாயின் நிச்சயம் நல்ல திருமணப்பேறு கிட்டும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதனை திருஞான சம்பந்தர் தம் ஆணையாகவே குறிப்பிட்டுள்ளார்.
செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர்.
வேதங்களை மீட்டுக் கொடுத்த சிவபெருமானை இத்தலத்தில் பிரம்மா பூஜித்துள்ளார். பிரம்மன் பூஜித்த தட்சிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
SIVANARUL
Remove Obstacles In Marriage:
Both Sambandar and Thirunavukkarasar have sung hymns on Vedhapurishwarar shiva linga in this temple located in Thanjavur district. Once a Chola king prayed here for getting her daughter married. The obstacle in her marriage was removed, therefore he renamed his daughter's name as Mangaiyarkarasi and served this temple. Sambandar has mentioned in his hymn that the lord under the banyan tree will remove the obstacles in Marriage for both men and women and has been praised by such married women.
Lord Bramma has also worshiped Vedhapurishwarar for getting his lost vedhas from the sea.
Song sung by: Mylai Thiru. Sathguru Odhuvar
![](https://i.ytimg.com/vi/xZCuSFEctCQ/maxresdefault.jpg)